நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்களுடைய பிளாக் போஸ்ட்களை இந்த வெப்சைட்டில் இணைத்தால் போதும் அவர்கள் உங்களுடைய பதிவை பரிசீலித்துவிட்டு நல்ல கருத்துக்கள் செய்திகள் இருப்பின் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சுமாராக ஒரு நல்ல செய்திக்கு ரூபாய் 2500 வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
CLICK HERE
உங்களுக்கு இதுபோன்ற செய்திகள் உபயோகமாக இருப்பின் உங்களுடைய விருப்பத்தை வாக்குகளாக தெரிவியுங்கள். அது எங்களுக்கு ஊக்கத்தையும் இதுபோன்ற செய்திகளையும் உங்களுக்கு தர ஏதுவாக இருக்கும். தங்கள் வருகைக்கு - தங்கள் வாக்குகளுக்கு நன்றி!.
"மதக் கலவரங்களை கையாள புதிய சட்டம்"
சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. மதவன்முறையை கையாள தேவையான புதிய சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றறப்படும். என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். பெல்லாரி மற்றும் ஐதராபாத்தில் நிகழ்ந்த இனக்கலவரங்களை அடுத்து இதைத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த மாநில சிறுபான்மையினர் கமிஷன்கள் மாநாட்டில் நேற்று பேசிய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது
நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரங்கள் நிகழந்துள்ளன. இவற்றில் சிறு தகராறுகள், பல பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. இதனால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சமும், ஒரு பாதுகாப்பற்ற தன்மையும் உருவாகியுள்ளது.
அவர்கள் கவலைப்பட தேவையில்லை. சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதிலும், மதசார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், மத சிறுபான்மையினர் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மத வன்முறை அரசுக்கு கவலை தரும் ஒரு அம்சம். இதை கருத்தில் கொண்டே மத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு) மசோதா உருவாக்கப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அத்துடன் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மற்றும் இதர அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டன. அவை மசோதாவில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டின. அந்த அடிப்படையில், மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட மசோதா மீண்டும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அது சட்ட மசோதாவாக உருவாகும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
******
(கண்டிப்பாக இந்த சட்டங்கள் குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். உங்களின் கருத்தை சொல்லவும்)
Shoaib Malik & Saniya Mirza
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜுலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக. கடந்த ஜனவரி மாதம் திடீரெண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக் - சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும், வரும் ஏப்ரல் மாதம் 16 மற்றும் 17ம் தெதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.